திருவாரூர் யக்னேஸ்வரர்





	


	



























	




 




	








 




4:47:58 AM         Monday, February 09, 2026

திருவாரூர் யக்னேஸ்வரர்

திருவாரூர் யக்னேஸ்வரர்
திருவாரூர் யக்னேஸ்வரர் திருவாரூர் யக்னேஸ்வரர் திருவாரூர் யக்னேஸ்வரர் திருவாரூர் யக்னேஸ்வரர்
Product Code: திருவாரூர் யக்னேஸ்வரர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                        திருவாரூர், யக்னேஸ்வரர்  
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் நகரில் உள்ள திருவாரூர் தியாகராஜா கோயிலுக்கு மேற்கு கோபுரத்தின் எதிர் பக்கத்திலும், குளத்தின் மறுபுறத்திலும் இந்த கோயில் அமைந்துள்ளது.  

இறைவன் : யக்னேஸ்வரர்

இறைவி  :   உத்திரவேதி 

தல தீர்த்தம் : கமலாலய தீர்த்தம்

தல சிறப்புகள் :  மூலவர் பின்புறத்தில் மேற்கு  நோக்கி திசையில் நுழைவாயில் உள்ளது. பிரகாரத்தில் கைலாசநாதர் 16 பட்டைகளுடன் சோடச லிங்கமாக காட்சி தருகிறார். சுந்தரர் சிவ யாத்திரை சென்ற விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் சன்னதியில் பெற்ற பரிசு முடிப்பை அத்தலத்தில் உள்ள மணி முத்தாறு தீர்த்தத்தில் போட்டு விட்டு கமலாய தீர்த்தத்தில் எடுத்து கொண்டார். இவ்வாறு சிறப்பு மிக்க தீர்த்தத்தின் மேற்கு கரையில் இக்கோவில் அமைந்துள்ளது. கமலாய தீர்த்தத்தில் 64 தீர்த்த கட்டங்கள் உள்ளதாக ஐதீகம். 43 வது தீர்த்த கட்டம் இந்த தலத்தில் உள்ளது. இதனை ஸ்வாமியின் பெயரால் யக்னேஸ்வரர் கட்டம் என்று அழைக்கப்படுகிறது.

கோவில் அமைப்பு : இந்த கோயில் கிழக்கு திருவிழா கோயிலாகும், இது திருவாரூர் கோயில் குளத்தின் கரையில் அழகாக அமைந்துள்ளது. தெய்வத்தை முன்னிலைப்படுத்துவது யக்னேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது, மேலும் கிழக்கு நோக்கி உள்ளது. அம்மா உத்ரவேதியம்பல் என்று அழைக்கப்பட்டு தெற்கே எதிர்கொள்கிறார் . விநாயகர் மற்றும் நவகிரகத்திற்கான சிவாலயங்களை பிரகாரத்தில் காணலாம். இங்குள்ள சிறப்பு என்னவென்றால், நவகிரகங்கள் ஒரே வரிசையில் உள்ளன. சுப்ரமணியர், பைரவர், சனிஸ்வரர், சூரியன், சண்டிகேஸ்வரர், நவக்கிரக சன்னதிகள் உள்ளன. சிவன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். அம்பாள் தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறாள். கைலாயத்தின் திசை வடக்கு அம்பிகை வடக்கு திசையை நோக்கி இருப்பிடமாக கொண்டுள்ளதால் உத்திர வேதி என்று அழைக்கப்படுகிறாள். இங்கு வழிபட்டால் கைலாயம் சென்ற புண்ணியம் கிடைக்கும். திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு பிரதான தீர்த்தம் கமலாய தீர்த்தம் ஆகும். 
பிரம்மாவிற்கு சிவனை போன்று இந்து தலைகள் இருந்ததால் தன்னையும் சிவனக்கு இணையாக கருதி ஆணவம் கொண்டார். ஆணவத்தை அடக்கிய சிவன் ஒரு தலையை கிள்ளி எடுத்துவிட்டார். மன்னிப்பு வேண்டி ஒரு யாகம் செய்ய விரும்பி இத்தலத்தை தேர்ந்துஎடுத்து ருத்திர யாகம் செய்தார். சிவன் ரிஷபரூடராக அம்பிகையுடன் காட்சி தந்தார். பிரமனுக்கு மீண்டும் படைக்கும் ஆற்றலை கொடுத்தார் சிவன். எனவே இவரை யாக நாதர் என்றும் அழைப்பர். 

காலை 6.00 மணி முதல் பகல் 10.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி

அருகிலுள்ள  நிலையம்   :  திருவாரூர்

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  உண்டு

உணவு வசதி : உண்டு

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×