சுந்தராபுரம், வாலீஸ்வரர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் சுந்தராபுரம் எனும் பகுதியில் உள்ளது
இறைவன் : வாலீஸ்வரர்
உற்சவர் : சந்திரசேகரர், சௌந்தரவல்லி
இறைவி : வடிவாம்பிகை
தல விருட்சம் : வில்வம்
தல தீர்த்தம் : நொய்யல்
தல சிறப்புகள் : வாலி பூஜை செய்த இடம். ராமாயண காலத்தில் கட்டப்பட்ட கோவிலாகும். கிழக்கு திசை நோக்கிய இத்தலத்தை 12 முறை வலம் வந்தால் திருமண, குழந்தை வரம் கிடைக்கும். முதலில் ஆதி விநாயகரை வணங்கிய பிறகு, நந்தி, வல்லப விநாயகரை தரிசித்த பின்னரே மூலவரை வணங்க வேண்டும். வள்ளி தெய்வானையுடன், வடிவம்மாள், நடராஜர் நவக்கிரக சன்னதிகள் உள்ளது. குறிஞ்சி பகுதியில் நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள 38 சிவன் கோவில்களில் இதுவும் ஒன்று. 3ம் நூற்றாண்டில் கரி கால சோழன் திருப்பணி செய்துள்ளார். 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தலமாகும். சிவன், பார்வதிக்கு நடுவில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் சோமாஸ்கந்தராக உள்ளார். ஐப்பசி சூரசமஹாரம், தை மாதம் ஆண்டு விழா, சிவராத்திரி இங்கு கொண்டாடப்படுகிறது.
காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : கோயம்புத்தூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : கோயம்புத்தூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை