ஆயக்குடி, கைலாசநாதர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் ஆயக்குடி என்னுமிடத்தில் அமைந்துள்ளது.
இறைவன்: கைலாசநாதர்
இறைவி : விசாலாட்சி
தல சிறப்புகள் : சோழ தேசத்தில் திருவாரூரை சுற்றி உள்ள ஊர்களில் நிறைய கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் அபிஷேகமும், பூஜைகளும் நடைபெறுவதற்கு ஒரு கிராமம் உருவாக்கப்பட்டது. அந்த கிராமமே ஆயக்குடி ஆகும். அக்கோயில்களுக்கு விளக்கெரிப்பதற்காக எண்ணெய் இங்கிருந்து அனுப்பப்பட்ட பெருமையை உடையது.
ஐப்பசி அன்னாபிசேகம், கார்த்திகைத் திருவிழா போன்ற விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன. பல ஊர்களில் இருந்தும் மக்கள் இக்கோவிலில் உள்ள குளத்தில் நீராடி இறைவனை தரிசித்து விட்டு நெய்வேத்தியம் செய்த உணவையே சாப்பிட்டு தங்கி விட்டு எண்ணையும், பாலையும் எடுத்து செல்வர். வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
காலை 5.00 மணி முதல் பகல் 8.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி
அருகிலுள்ள நிலையம் : திருவாரூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை