திருவாரூர், கைலாசநாதர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் கீழ வீதியில் அமைந்துள்ளது.
இறைவன் : கைலாசநாதர்
இறைவி : மாணிக்கவல்லி
தல விருட்சம் : வில்வம்
தல தீர்த்தம் : கமலாலயம்
தல சிறப்புகள் : இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். கைலாயம் செல்ல இயலாதவர்கள் இங்கு வந்து வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும் என்று மக்கள் கருதுகின்றனர்.
கோவில் அமைப்பு : இக்கோவிலில் இரண்டு நிலை ராஜா கோபுரங்களுடன் மேற்கு பக்க வாசல் அமைந்துள்ளது. தியாகராஜர் கோவிலை நோக்கி உள்ளது. கருவறையில் இறைவனுக்கு வலது புறத்தில் சாந்த சொரூபியாக மாணிக்கவல்லி காட்சி தருகிறாள். மேலும் சண்டிகேஸ்வரர் தனி சன்னதி கொண்டு உள்ளார். மிகவும் தொன்மை வாய்ந்த, சிறப்பு வாய்ந்த இத்தலம் திருவாரூரில் சிறப்புடையதாகும். 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோவில் ஆக்கிரப்பு பகுதிகளால் இருப்பிடம் தெரியாமல் இருந்து வந்தது. கடந்த 2009 ம் ஆண்டு சக்கரை விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தின் போது அர்ச்சகர் கனவில் ஈசன், பல காலமாக பராமரிப்பு இல்லாமலும் விரைவில் கும்பாபிஷகம் செய்ய வேண்டும் எனவும் அசிரீ கூறி மறைந்தது. அன்று இரவே அங்கு வந்து பார்த்த போது மண்ணில் சிவன் எடுத்து கீற்றுக் கொட்டகையில் வைத்து பூஜை செய்து வந்தனர். 2013 ஆண்டு விமரிசையாக கும்பாபிஷகம் செய்யப்பட்டது.
பிரதோஷம், அமாவாசை, ஆருத்திரா தரிசனம், மாசிமகம், பங்குனி உத்திரம், சிவராத்திரி விழாக்கள் கொண்டாடப்படுகிறது.
காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி
அருகிலுள்ள நிலையம் : திருவாரூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை