இளங்கார்குடி, கைலாசநாதர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் மேற்கே 19 கி.மி தொலைவில் குடவாசல் வட்டத்தில் உள்ளது .
இறைவன் : கைலாசநாதர்
உற்சவர் : சண்முகநாதர், வள்ளி தெய்வானை
இறைவி : பெரியநாயகி அம்மாள்
தல விருட்சம் : வில்வம்
தல தீர்த்தம் : சூரிய தீர்த்தம்
தல சிறப்புகள் : சோழர்கள் கட்டிய 108 சிவத்தலங்களில் இதுவும் ஒன்று. கிழக்கு பக்கம் நோக்கிய நுழைவாயிலில் விநாயகர், முருகர், மூலவர் கிழக்கு பார்த்தும், அம்பாள் தெற்கு நோக்கியும் உள்ளனர். வெளி பிரகாரத்தில் தனி சன்னதியுடன் நவக்கிரக மூர்த்திகளும், கால பைரவர் தெற்கு நோக்கி உள்ளார். இங்கு பஞ்சபாண்டவர்கள் வழிபாடு நடத்தியுள்ளனர். கடன் தீர பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி பிராதிக்கின்றனர். இப்பகுதியில் 1890ம் ஆண்டு ஊத்துவார்கள் தங்க வைத்து வேத கற்பிக்கப்பட்ட தோடு, இத்தலத்தை மையப்படுத்தி நான்கு திசைகளிலும் கோவில் அமைக்கப்பட்டு உள்ளது. பிரதோஷம், சிவராத்திரி, அமாவாசை, ஆருத்திரா தரிசனம், மாசிமகம், பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகிறது. சகல ஐஸ்வர்யங்கள், திருமண தடை, புத்திர பாக்கியம் ஆகியவற்றிக்கு இங்கு பிராத்தனை செய்கின்றனர்.
காலை 9.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி
அருகிலுள்ள நிலையம் : திருவாரூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை