கூனஞ்சேரி, கைலாசநாதர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவைகாவூர் சாலையில் சுவாமிமலையில் இருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த கோயிலை கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ. இந்த கோயில் காவேரி ஆற்றின் கரையில் உள்ளது.
இறைவன் : கைலாசநாதர்
இறைவி : பார்வதி
தல சிறப்புகள் : இச்சிவாலயம் தேவாரத் தலமல்ல எனினும், புராணப் புகழ் பெற்றது. திவ்ய தேசங்களான புள்ளபூதங்குடி, ஆதனூர் ஆகிய இரண்டு வைணவத் தலங்களுக்கும் இடையில் அமைந்துள்ளது. அளவில் பெரிய கோயில் அல்லவெனினும், நன்றாகப் பராமரிக்கப்பட்டு அழகான கிராமச் சூழலில் அமைந்துள்ளது. பூதங்குடி கோயிலிலிருந்து நடந்தே செல்லுமளவு மிக அருகிலேயே அமைந்துள்ளது.இத்தலத்து அஷ்டலிங்கங்களைத் தரிசிப்போர், திருவண்ணாமலை கிரிவலத்தில் காணப்படும் தசலிங்கங்களைத் தரிசித்த புண்ணியத்தைப் பெறுவர் என்பது ஐதீகம்.
தல வரலாறு : உத்தால மஹரிஷியின் சீடனும், அவரது மாப்பிள்ளையுமான கனோஹர் என்பவர் மிகுந்த நல்லொழுக்கம் கொண்டிருந்தாலும், அறிவுத்திறனில் சிறந்தவரல்ல; அவர் தமக்கு குரு உபதேசித்த மந்திரங்களைத் தப்பும் தவறுமாக உச்சரித்து வந்ததால், அவர் மனையாள் சுஜாதாவின் கருவிலிருந்த சிசு இயல்பிலேயே ஞானம் பெற்றிருந்தமையால், அத்தவறுகளைப் பொறுக்க இயலாது தன் உடலைப் பலவாறு குறுக்கிக் கொண்டு வேதனையுற்றது. அதன் காரணமாகப் பிறக்கையில் உடலில் எட்டுக் கோணல்களுடன் பிறந்து அஷ்டவக்கிரன் என்ற பெயரையும் பெற்றது. அச்சிறுவன் வளர்ந்து சிறந்த பண்டிதனாகி, ஜனகமஹாராஜாவின் ஆஸ்தான பண்டிதரை வாக்குவாதத்தில் தோற்கடித்து மிக்க புகழையும் அடைந்தான். அச்சிறுவன் அஷ்டலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து தனது அஷ்ட கோணல்கள் நீங்கப் பெற்ற திருத்தலம் இதுவாகும். உடலில் கூனல்களைப் போக்கிய இடம் என்பதால், கூனஞ்சேரி என்ற பெயர் பெற்றது.
கோவில் அமைப்பு : இந்த கோயிலின் பிரதான சன்னதி ஸ்வயம்பூமூர்த்தி ஸ்ரீ கைலாசநாதர் கிழக்கு நோக்கி உள்ளது. இறைவிக்கு இரண்டு ஆலயங்கள் உள்ள மற்றொரு அரிய கோயில் இது. பிரதான சன்னதி தெற்கே எதிர்கொள்ளும் ஸ்ரீ பார்வதியும், ஸ்ரீ ஜாத மகுடா சவுண்டரியநாயகியின் சன்னதியும் கிழக்கு நோக்கி உள்ளது. பிரதோஷம், அஷ்டமி, அமாவாசை போன்ற முக்கியமான நாட்களில் எட்டு வெவ்வேறு பூக்களைக் கொண்டு இறைவனையும் தாயையும் வணங்குவது ஒருவரின் ஆசைகளை நிறைவேற்ற பரிந்துரைக்கப்படுகிறது. பிரகாரங்களில் பால கணபதி, முருகன், அஷ்ட லிங்கம் மற்றும் தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன. அஷ்டவக்கிர முனிவர் பிரதிஷ்டை செய்த அஷ்ட லிங்கங்களும் பிரகாரத்தில் காணலாம். பிருத்வி லிங்கம், அக்னிலிங்கம், அப்பு லிங்கம், வாயுலிங்கம், ஆகாசலிங்கம், சூரியலிங்கம், சந்திரலிங்கம் மற்றும் ஆத்மலிங்கம் என்பனவாம்.
இத்தலத்து கைலாசநாதரையும், பார்வதி அன்னையையும் தொழுவோர்க்குப் புத்திரபாக்கியம் விரைவில் கிட்டும் என்பது நம்பிக்கை. அஷ்டவக்கிரனின் குறையைப் போக்கிய தலமாதலால், உடல் ஊனமுற்றோர் இங்கு தம் குறைகள் நீங்கவும், குறையவும் வந்து தொழுகின்றனர். அங்க ஹீனத்திற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்வோர் நல்ல முறையில் அது நடந்தேற இத்தலத்து ஈசனை வேண்டிப் பின் தம் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொள்வது வழக்கம். இளம்பிள்ளை வாதம், கூனல் முதுகு, போலியோ போன்றவற்றால் அவதியுறுவோர் தங்கள் சிகிச்சை நல்ல முறையில் பயனளிக்க இங்கு அஷ்டலிங்கங்களையும் பைரவரையும் தரிசித்து பார்வதி சமேதராகக் காட்சியளிக்கும் கைலாசநாதரைத் தொழுதால், தங்கள் குறை நீங்கப் பெறுவர் என்பர்.
காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி
அருகிலுள்ள ரயில் நிலையம் : கும்பகோணம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை