திருத்தண்டிகைபுரம், சனத் குமரேஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் எனும் கிராமத்தில் உள்ளது.
இறைவன் : சனத் குமரேஸ்வரர்
இறைவி : சௌந்திர நாயகி
தல தீர்த்தம் : பலா மரம்
தல விருட்சம் : சோமதீர்த்தம்
தல சிறப்புகள் : மூலவர் மேற்கு நோக்கி இருப்பதும், 12 ராசிகளை பீடமாக அமைத்து அமர்ந்த கோலத்தில் தட்சணாமூர்த்தி இருப்பது சிறப்பாகும். இது ஒரு குருஷேத்திரமாக உள்ளது.
விநாயகர், சண்முகர், சண்டிகேஸ்வரர் தனி தனி சன்னதி கொண்டுள்ளது. சூரியன் , சந்திரன், திருஞானசம்பந்தர், அப்பர் உருவ சிலைகள் உள்ளது. கோஷ்டத்தில் பிரம்ம, துர்க்கை, லிங்கோத்பவர், தட்சணாமூர்த்தி உள்ளனர். அம்பிகை தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் அபய முத்திரையையுடன் இருக்கிறாள். பௌர்ணமி தினத்தன்று ஒரு நல்ல பாம்பு அம்பிகையின் திருவடியில் நான்கு நாட்கள் இருந்து விட்டு பிறகு மாயமாக மறைந்துவிட்டது. மாசி மாத விளக்கு பூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மதுரை மன்னன் மாறவர்மன் சுந்தர பாண்டியனால் கட்டப்பட்டது. இக்கோவிலின் முன் சுருளியாறு வடக்கு நோக்கி பாய்வது சிறப்பாகும். குபேரன் தான் இழந்த செல்வதை இத்தலத்தில் இறைவனை வழிபட்டு பெற்றதினால் இத்தலம் குபேர தலமாகவும் உள்ளது. பக்தர்கள் இழந்த செல்வதை மீண்டும் பெற ஈசனை வழிபட்டு பெறுகின்றனர். பிரதோஷம், மாத சிவராத்திரி, நவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
காலை 6.00 மணி முதல் பகல் 10.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி
அருகிலுள்ள ரயில் நிலையம் : கும்பகோணம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை