திருவனந்தபுரம், சபாபதி
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் கேரளா மாநிலத்தின் திருவனந்தபுரம் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது.
இறைவன் : நடராஜர்
தல சிறப்புகள் : இங்கு நடராஜரை தட்சணமூர்த்தியாக வழிபடுவது சிறப்பு. சிவலிங்கத்திற்கு செய்வது போல் இங்கு நடராஜருக்கு சிலை மேல் தாரா பாத்திரத்தில் புனித நீர் ஊற்றி ஜலதாரை வழிபாடு நடக்கிறது.
கோவில் அமைப்பு : நடராஜருக்கு நேர் எதிரில் உஜைனி அம்பாள் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மூலம் திருநாள் மகாராஜா காலத்தில், பத்ம நாப சுவாமி கோவில் பூஜைக்கு தேவையான பூக்களுக்கு ஒரு நந்தவனம் அமைக்கப்பட்டது. பஞ்ச லோகத்தால் ஆன நடராஜர் சிலை இருந்த கோவிலில் பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. காலப்போக்கில் நந்தவனத்தை சுற்றி கடைகள், வீடுகள் என இருந்தன. பல்வேறு சோதனை கள் ஏற்ப்பட்டது.பிரசன்னம் பார்த்ததில் நடராஜர் கோவிலில் பூஜைகள் நடைபெறவில்லை என்பதனாலும், கோவில் எதிரில் அரை கிலோ மீ தொலைவில் முத்தாரம்மன் கோவில் நேர் திசையில் இருப்பதனாலும், இந்த கோவிலுக்கு நடுவில் அட்சய பாத்திரதுடன் அம்பாள் சிலை பிரதிஷடை செய்தால் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று கூறப்பட்டது. அதன் பிறகு பூஜைகள் நடைபெற்று வருகிறது. திருமண மகாதவர்கள் மாங்கல்ய பாக்கியம், குழந்தை பாக்கியம், சித்தபிரமை நீங்குதல் ஆகியவற்றுக்கு மார்கழி மாத திருவாதிரை நட்சத்தித்தன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது. ஆனந்த தாண்டவத்தில் நடராஜர் காட்சி தருகிறார். திங்கள், விழக்கிழமைகளில் கொண்டை கடலை மாலை சாதிக்கின்றனர்.
காலை 5.30 மணி முதல் பகல் 9.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருவனந்தபுரம்
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருவனந்தபுரம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு