சின்னையா சத்திரம், காசி விஸ்வநாதர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் சின்னையா சத்திரம் எனும் இடத்தில் உள்ளது.
இறைவன் : காசி விஸ்வநாதர்
இறைவி : விசாலாட்சி
தல விருட்சம் : மகிழம் மரம்
தல சிறப்புகள் : காஞ்சி பெரியவரால் நடப்பட்ட மகிழம் மரம் தலத்தில் உள்ளது.
கோவில் அமைப்பு : மூலவர் விஸ்வநாதர் கிழக்கு நோக்கியும் அம்பாள் தெற்கு நோக்கியும் உள்ளனர். அம்மன் சன்னதியில் உள்ள பிரதான வாசல் ஆண்டு முழுவதும் திறந்து உள்ளது. பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், நவக்கிரகம், துர்கை, தாட்சணாமூர்த்தி சன்னதிகள் உள்ளன. கோட்டை சுவருக்கு வெளியே வாலில் மணிகட்டிய ஆஞ்சநேயர் உள்ளார். குழந்தை பாக்கியம், திருமண தடை வேண்டி மற்றும் சகல விதமான பிராத்தனை செய்கின்றனர். குழந்தைபேறு இல்லாதவர்கள் காசி சென்று மூன்று நாட்கள் நீராடினால் அடைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. காசி செல்ல இயலாதவர்கள் இத்தலத்திற்கு வருகை செய்கின்றனர். காஞ்சிப்பெரியவர் தங்கிய வீடு கோவிலுக்கு அருகில் உள்ளது. மேலும் சுற்று வட்டார கிராம மக்கள் தங்களது இல்ல சுப நிகழ்ச்சிகளை இங்கு நடத்துகின்றனர். தமிழ் புத்தாண்டு, திரு கார்த்திகை, அன்னாபிஷகம் இங்கு நடைபெறுகிறது.
காலை 7.30 மணி முதல் பகல் 10.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : புதுக்கோட்டை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை