அசோக் நகர், ஸ்ரீ தோபாசாமி (எ) மல்லிகேஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னையின் அசோக் நகர் பில்லர் அருகில் வடபழனி சாலையில் உள்ளது.
இறைவன் : மல்லிகேஸ்வரர்
இறைவி : மகேஸ்வரியம்மாள்
தல விருசட்சம் : வில்வம்
தல வரலாறு : 500 வருடங்களுக்கு முற்பட்ட கோயில் ஆகும் , தோபா சாமி சித்தர் இங்கு தங்கி இறைவனை தினமும் பூஜித்ததாக குறிப்பு உள்ளது. அவர் கிபி 1780 -1830 வாழ்ந்த மகான். இவரின் ஜீவ சமாதி வேலூரில் உள்ள சைதாப்பேட்டை என்ற இடத்தில் உள்ளது. இவருடைய திருமடம் திருவெற்றியூர் ,திருமயிலை ,திருப்பாப்புலியூர் ஆகிய இடங்களில் உள்ளது.
கோயில் அமைப்பு : மூன்று அடுக்கு ராஜா கோபுரம் உள்ளே நுழைந்தவுடன் மாடம் கருவறை சதுர வடிவில் உள்ளது. சக்தி கணபதி அடுத்ததாக மல்லிகேஸ்வரர் அடுத்ததாக விசாலாக்ஷி சமேத விஸ்வநாதர் அதன் பின் தெற்கு நோக்கி மல்லிகேஸ்வரி தாயார் காட்சி தருகிறார். பிரகாரத்தில் பக்த ஆஞ்சநேயர் , சீதா சமேத ராமர் , சத்திய நாராயணர் மற்றும் நவகிரஹ சன்னதி ,சனீஸ்வரன் சன்னதி ,பைரவர் சன்னதிகள் தனி தனியாக உள்ளன. ஆஞ்சநேயரை சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ப்ரிதிஷ்டை செய்துள்ளார். இக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது.
காலை 6.00 மணி முதல் மதியம் 11.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் 8.00 மணி வரை நடை திறந்து இருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : மாம்பலம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு