பாலவநத்தம் கைலாசநாதர்





	


	



























	




 




	








 




10:04:49 AM         Friday, May 01, 2026

பாலவநத்தம் கைலாசநாதர்

பாலவநத்தம் கைலாசநாதர்
பாலவநத்தம் கைலாசநாதர் பாலவநத்தம் கைலாசநாதர்
Product Code: பாலவநத்தம் கைலாசநாதர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                        பாலவநத்தம், கைலாசநாதர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் விருதுநகர் மாவட்டத்தில், அமைந்துள்ள கிராமங்களில் பாலவநத்தம் முக்கிய நகரமான அருப்புக்கோட்டையிலிருந்து 11.6 கி.மீ தூரத்திலும், விருதுநகரிலிருந்து 8.8 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. கோவில்பட்டியில் இருந்து 23 கி.மீ தொலைவிலும் திருநெல்வேலியிலிருந்து 50 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. 

இறைவன் : கைலாசநாதர்

இறைவி :  ஆனந்தவல்லி 

தல தீர்த்தம்: சிவதீர்த்தம்

தல விருட்சம்: வில்வமரம்

தலச் சிறப்புகள் :  சுவாமிக்கும் அம்மனுக்கும் நடுவே பாலமுருகன் சன்நிதி அமைப்பெற்றுள்ளது. இத்திருக்கோயிலின் தனிச் சிறப்பாகும். இதுவே சோமஸ்கந்தர் என்று அழைக்கப்படுகிறது. இச்சந்நிதியில் சஷ்டியப்த பூர்த்தி அறுபது வயது கடந்தவர்களுக்கும், சதாபிசேகம் எண்பது வயது கடந்தவர்களுக்கும் திருமணம் நடைபெறுவது மிகச் சிறப்பு வாய்ந்தது. 


தல வரலாறு :  அடர்ந்த காட்டில் இருந்து மேய்ந்து வந பசுக் கொட்டத்தில் இருந்த ஒரு பசு திருக்குளத்தில் நீராடி தானே பாலைச் சொரிந்து வந்தது. இந்த இடத்தில் லிங்கம் இருந்துள்ளது. பசு வந்து அணைந்து பால் சொரிந்துள்ளதால் இத்தலம் பசுவந்தனை பெயர் பெற்று அழைக்கப்படுகிறது. புராணச் சிறப்பு பூவுலகில் சிறந்தது கயிற்றாறு என்னும் புண்ணிய நாடு, அதனை ஆண்டு வந்த மன்னன் பசுக்களை போற்றி வந்தார். பசுக் கூட்டங்கள் மன்னனின் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியில் தினமும் புல் மேய்வது வழக்கம் அந்த பசுக் கூட்டத்தில் இருந்த ஒரு பசு அங்குள்ள ஒரு குளத்தில் நீராடி வில்வ மரத்தடியில் இருந்த ஒரு சிவலிங்கத்தின் மீது பாலைச் சொரிந்துவிட்டு பின்னர் கூட்டத்தில் வந்து சேர்ந்துவிடும். தினமும் இந்த நிகழ்ச்சியால் பால் குறைவதை அறிந்த மன்னன் காவலர்களை அனுப்பி உண்மையைக் கண்டறிந்தார். இறையுணர்வு மிக்க தனது பசு பால் சொரியும் இடத்தை சென்றடைந்த மன்னன் அங்கிருந்த சிவலிங்கத்தைக் கண்டு பணிந்து வணங்கினார். இரவு படையுடன் அங்கு தங்கியிருந்த மன்னன் வானவர்கள் வந்து அந்த சிவலிங்கத்தை அர்ச்சித்து வழிபாடு செய்வதைக் கண்டு மெய் உருகி வழிபட்டான். பசு பால் சொரிந்து வானவர்கள் வழிபட்ட சிவலிங்கத்திற்கு அந்த இடத்திலேயே ஆலயம் ஒன்று எழுப்ப முனைந்தார். அதன்படி அந்த இடத்தில் ஆனந்தவல்லி சமேத கைலாசநாதருக்கு சிறியதாக ஓர் ஆலயம் அமைத்தார். திருக்கோயிலைச் சுற்றி முறைப்படி வீதிகள் அமைத்து நகரமாக்கினார். பசு அருகில் வந்து பால் சொரிந்து வளர்த்ததும் வானவர்கள் வந்து தினமும் வழிபட்ட சிவலிங்கம் உள்ள இத்திருத்டலம் பசு வந்து அணை எனப் பெயர் பெற்று பின்னர் பசுவந்தனை என அழைக் கப் பெறலாயிற்று. பசுவந்து ஹீராடிய குளம் சிவ தீர்த்தம் என்றும் கோசிருஙவாவி என்றும் அழைக்கப்படுகிறது. 

எட்டையபுரம் அருகிலுள்ள தெற்கு முத்தலாபுரம் என்ற கிராமத்தில் ஐம்பத்து ஒரு ஆண்டுகளுக்கு முன்பு சுப்பா நாயக்கர் என்பவர் வாழ்ந்து வந்தார். திடீரென ஒரு நாள் நன்றாக இருந்த அவரது இரு கண்களும் பார்வையை இழந்துவிட்டன. அவர் இத்திருத்தலத்து இறைவன் மீது கொண்ட பக்தியினால் திருக்கோயிலுக்கு வந்து தினசரி வாவியில் நீராடி ஈசனை வழிபட்டு நாற்பத்தியொரு நாட்கள் மண் சோறு உண்டு விரதமிருந்தார. நாற்பத்தி இரண்டாவது நாள் இறையருளால் பார்வை வரப் பெற்றது. இந்நிகழ்ச்சியினால் இத்திருத்டலத்து இறைவன் இப்பகுதி கக்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறார். வீர பாண்டியபுரம் சிற்றசர் காமாட்சி ரெட்டியார் குழந்தைபேறு வேண்டி சோமயாகம் செய்தார். அதனால் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. சோமயாக செய்ததற்கு சாட்சியாக கிணறு என்றும் வற்றாததாக உள்ளது. இத்திருக்கோயிலில் சுவாமி சுயம்புலிஙமாக வீற்றிருப்பதால் பசு வந்து அணைந்து பால் சொரிந்துள்ளாதால் சுவாமிக்கு பால் அபிசேகம் செய்த தீர்த்தை உண்டால் புற்று நோய் போன்ற கொடிய நோய்கள் நீங்கும்.

காலை 7.00 மணி முதல் 1.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : மதுரை

அருகிலுள்ள ரயில் நிலையம் : விருதுநகர்

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×