சத்யவரதர், அரும்பாக்கம்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு அரும்பாக்கம் இணைப்பிலிருந்து கிழக்கே 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
சுவாமி : சத்யவரதர்
தாயார் : பெருந்தேவி
சென்னை, அரும்பாக்கத்தில், 1970களில் பாழடைந்து கிடந்த ஒரு மண்டபத்தில் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டார் சத்ய வரதராஜர். 750 ஆண்டு களுக்கு முன்பு இந்த ஊர் சத்யபுரி என்றும், தமிழில் அரும்பாக்கம் என்றானதாகவும் கூறுகிறார்கள். பிரயோக சக்கரமேந்தி வீற்றிருக்கும் இவரிடம் தீராத வழக்குகளை கொண்டு சென்றால் வெற்றி நிச்சயம் என்கிறார்கள். தர்மத்தைக் காக்கும் நீதிபதியாக திகழ்வதால் இவர் சத்யவரதர். இத்தலத்தில் உள்ள சுதர்சனருக்கு, நெய் தீபம் ஏற்றி 11 நாட்கள் வணங்கினால் காரியத் தடைகள் நீங்கும்.
காலை 7.00 மணி முதல் மதியம் 11.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை நடை திறந்து இருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : சென்ட்ரல்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு