தேவராஜன், நைமிசாரண்யம்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உத்திரபிரதேசம் மாநிலத்தில் தலைநகரான லக்னோ ரயில் நிலையத்திலிருந்து பாலமோவ் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து நைமிசாரண்யம் ரயில் நிலையத்தை அடையலாம். அல்லது லக்னோவிலிருந்து சீதாபூர் சென்று அங்கிருந்து பஸ்ஸில் நைமிசாரண்யம் செல்லலாம்.இங்கு அஹோபில மடமும், ஒரு ராமானுஜ மடமும் தங்க வசதியளிக்கின்றன.
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
தலச் சிறப்புகள் : மூலவர் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். ஆறு கோண வடிவம் கொண்டது. கோமுகி நதிக்குப் போகும் வழியில் வியாஸகட்டீ என்ற இடத்தில் வேதவ்யாஸர் ஆலயம் உள்ளது. இதுதான் வ்யாஸ பகவானும், சுகப்ரஹ்மமும் ப்ரவசனங்கள் செய்து பாரதம், பாகவதம் முதலிய இதிகாச புராணங்களை இயற்றிய புண்யபூமி. விகானாஸாசாரியார் வேதரித்த ஸ்தலம், அவருக்கு ஒரு சந்நிதியும் இருக்கிறது.
ஊரின் மற்றொரு புறத்தில் புராண மந்தர் என்ற சுகபகவான் ஆலயத்தில் அவருடைய வெண்கலச்சிலை (கிளிமூக்குடன்) பெரியதாக வைக்கப்பட்டுள்ளது. இதற்குச் சற்று அப்பால் ஒரு சிறிய குன்றின் மேல் ஹனுமான்சட்டீ என்ற ஆலயத்தில் மிகப் பிரம்மாண்டமான உருவுள்ள ஹனுமார், ஸ்ரீ ராமலக்ஷ்மணர்களை இரு தோள்களிலும் எழுந்தருளிப் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். பாலாஜி மந்திர் என்று அழைக்கப்படும் பூசமேத வெங்கடேஸ்வர் சுவாமி கோயில் ஒன்றும் நைமிசாரண்யத்தில் உள்ளது. இங்கு தங்குமிடம் உண்டு. தென்னிந்திய உணவும் கிடைக்கிறது.
அருகிலுள்ள விமானதளம் : லக்னோ
அருகிலுள்ள ரயில் நிலையம் : நைமிசாரண்யம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு