107. திருப்பாற்கடல்





	


	



























	




 




	








 




3:34:19 AM         Saturday, May 02, 2026

107. திருப்பாற்கடல்

107. திருப்பாற்கடல்
107. திருப்பாற்கடல் 107. திருப்பாற்கடல் 107. திருப்பாற்கடல் 107. திருப்பாற்கடல் 107. திருப்பாற்கடல் 107. திருப்பாற்கடல் 107. திருப்பாற்கடல்
Product Code: 107. திருப்பாற்கடல்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                               ஸ்ரீ க்ஷீராப்தி நாதன், திருப்பாற்கடல்

திருத்தல இருப்பிடம்: வங்காளவிரிகுடா கடலைத் திருப்பாற்கடலாகக் கொண்டு சேவிக்கலாம். இந்த மானிட உடலோடு போக முடியாத முதல் தலம் இது. விடுதலை பெற்ற ஆன்மாக்கள் விரும்பிச் செல்லும் தலம் இது.

மூலவர்  :    ராப்தி நாதன் (வயூக நிலை), 
 
தாயார்   :    ஸ்ரீபூதேவி, கடல்மகள் நாச்சியார்.
 
தீர்த்தம்  :    அம்ருத தீர்த்தம்

விமானம் :    அஷ்டாங்க விமானம்

மங்களாசாசனம் : பெரியாழ்வார் - 5 பாசுரங்கள்,  ஆண்டாள் - 3 பாசுரங்கள், குலசேகராழ்வார் - 2

பாசுரங்கள்  : திருமழிசையாழ்வார் - 13 பாசுரங்கள்
               தொண்டரடிபொடியாழ்வார் - 1 பாசுரம்
               திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
               பொய்கையாழ்வார் - 1 பாசுரம்
               பூதத்தாழ்வார் - 2 பாசுரங்கள்
               பேயாழ்வார் - 4 பாசுரங்கள்
               நம்மாழ்வார் - 9 பாசுரங்கள்

தலச் சிறப்புகள்: மூலவர் ஆதிசேஷன் மீது சயனக் கோலத்தில் தெற்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். இது பிரம்மனின் அவதார தலம் ஆகும். ஸ்ரீவைணவச் செயல்கள் செய்து இவ்வுடல் விட்ட பின்பு இறைவனின் திருவடி எய்தும் போது பக்தன் ஒருவனைப் பெருமாள் திருப்பாற்கடலுக்கு நேரில் அழைத்துச் சென்று சேவை சாதிக்கிறான் என்பது ஐதீகம். 

திருப்பாற்கடல் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். பத்து ஆழ்வார்களால் பாடல்பெற்ற இத்தலம் இப்பூமியில் இல்லாத தலமாகும். இந்து தொன்மவியலில் பாற்கடல் என்பது திருமாலின் இருப்பிடமாக கூறப்படுகிறது. இந்த பாற்கடலில் ஆதிசேசன் என்ற பாம்பு படுக்கையில் திருமால் படுத்துக் கொண்டிருப்பதாக திருமுறைகள் குறிப்பிடுகின்றன.

தல வரலாறு :  இதற்கு வெள்ளையந்தீவு என்ற பெயரும் உண்டு. சஷீராப்தி என்னும் இந்த பாற்கடலில் பக்தர்களின் தரிசனத்திற்காக தன்னை வ்யூகப்படுத்தி அதாவது பல பிரிவாகப் பிரித்து வியூக வாசுதேவன் என்ற நாமத்தோடு இவன் யோக நித்திரையில் தன்னைச் சங்கர்ஷணன், ப்ரத்யும்னம், அநிருத்தன் என்னும் 3 உருவங்களாகப் பிரித்து ஆதிசேடனின் படுக்கையில் நிலமகளும், திருமகளும், திருவடிவருட பள்ளி கொண்ட நிலையே திருப்பாற்கடல் ஆகும். பக்தர் மற்றும் தேவர்களின் அபயக் குரல்கேட்டு பகவான் அபயமளிப்பது இவ்விடத்தில் தான். எனவே இவ்வுலகுக்கு கூப்பாடு கேட்கும் உலகு என்று பெயர். தேவர்கள் தங்கள் ஒவ்வொரு பிரச்சனையின் போதும் திருப்பாற்கடல் கரையருகில் நின்று எம்பெருமானைப் பள்ளியெழுப்பித் தமது முறையீட்டைத் தெரிவிப்பது வழக்கமாகும். பிரளய காலம் வரைதான் திருப்பாற்கடல் வாசம் பின்னர் மீண்டும் பரமபதம் செல்வார் அப்போது திவ்யதேசங்கள் மீண்டும் அவனுள் ஐக்கியமாகிவிடுகின்றன.

இந்து தொன்மவியலில் பாற்கடல் கடைதல் பெரும் நிகழ்ச்சியாகும். அமுதத்திற்காக வேண்டி பாற்கடலை கடைய தேவர்களும், தேவர்களின் அரசனான இந்திரனும் முடிவு செய்தார்கள். அதற்காக மந்திர மலையை மத்தாகவும், சிவபெருமானின் கழுத்தில் நாகாபரணமாக இருக்கும் வாசுகி பாம்பினை கயிறாகவும் கொண்டு கடைய முடிவெடுத்தார்கள். அதற்கு தேவர்கள் மட்டும் போதாதென அரக்கர்களுக்கும் சமபங்கு தருவதாக கூறி அவர்களையும் அழைத்தார்கள். வாசுகி பாம்பின் ஒரு புறம் தேவர்களும், மறுபுறம் அரக்கர்களும் இணைந்து பாற்கடலை கடையத் தொடங்கினார்கள். மந்திரமலையானது பாற்கடலினுள் மூழ்க தொடங்கியது. எனவே திருமால் ஆமையாக அவதாரம் எடுத்து, மந்திர மலையை தாங்கினார். தேவர்களும் அரக்கர்களும் மீண்டும் பாற்கடலை கடைந்தனர். நீண்ட நேரம் கடைந்ததன் காரணமாக வாசுகி பாம்பினால் வலி தாங்க முடியாமல் ஆலகால விஷத்தினை கக்கியது. அந்த விசத்தினால் உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும், தேவர்களும், அரக்கர்களும், இன்னபிற தேவகனங்களும் அழிய நேரிடும் என்பதால் அனைவரும் சிவபெருமானிடம் தங்களை காக்குமாறு வேண்டினார்கள்.
 
சிவபெருமான் அந்த ஆலகால விசத்தினை உண்டார். அவருடைய வயி்ற்றுக்குள் இருக்கும் உலக உயிர்களை விசம் அழிக்காமல் இருக்க, பார்வதி தேவி சிவபெருமானது கண்டத்தை பிடித்தார். அதனால் சிவபெருமானுடைய கண்டத்தில் விசம் தங்கி, நீலகண்டமாக உருவாகியது. அதன் பின் மீண்டும் அரக்கர்களும், தேவர்களும் பாற்கடலை கடைந்தார்கள்.
 
Mail this page Printable view
Tags: தி
×
×
×
×
×
×
×