விவேகானந்தர்
இருப்பிடம் : சுவாமி விவேகானந்தர் கோயில் பேலூர் மடம், ஸ்வாமி விவேகானந்தா சமாதி, ஹூப்ரி ஆற்றின் கரையில் கல்கத்தா ரயில்நிலையத்தில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
ராமகிருஷ்ணர், சரதா தேவி மற்றும் சுவாமி விவேகானந்தர் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் கங்கைக் கரையில் உள்ளது, இதில் அவற்றின் புனித நூல்கள் மற்றும் ராமகிருஷ்ண உத்தரவின் பிரதான மடம் ஆகியவை அடங்கும் . இந்த வளாகத்தில் ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் வரலாறு சம்பந்தப்பட்ட கட்டுரைகளை உள்ளடக்கிய ஒரு அருங்காட்சியகம் அமைந்துள்ளது.
வாழ்க்கை வரலாறு : 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் முதல் மகனாகப் பிறந்தார். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார். அவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. அவர் ஒரு துறவியாக மாறிய போது, தனது இயற்பெயரை ‘சுவாமி விவேகானந்தர்’ என்று மாற்றிக் கொண்டார். ஒரு குழந்தையாக சுவாமி விவேகானந்தர் அவர்கள், மிகவும் கலகலப்பாகவும், குறும்புத்தனமாகவும் இருந்தார். இவர் படிப்பு மற்றும் விளையாட்டுகளில் மிகச் சிறந்து விளங்கினார். இவர் மிகச்சிறிய வயதிலேயே, வாய்மொழி, இசைக் கருவிகள் வாசிப்பது, மற்றும் தியானம் ஆகியவற்றைப் பயிற்சி மேற்கொண்டு பயின்றார். இவர் இளம் வயதில் இருக்கும் பொழுதே, சாதி மத பாகுபாட்டால் சமூகத்தில் நிலவிய மூடபழக்கவழக்கங்கள் பற்றிப் பல கேள்விகளும், சந்தேகங்களும் எழுப்பினார். சுவாமி விவேகானந்தர் அவர்கள், 1879ல் மெட்ரிக் பள்ளிப்படிப்பை முடித்து, கல்கத்தாவிலுள்ள பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். ஒரு வருடம் கழித்து, அவர் கல்கத்தாவிலுள்ள ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்து தத்துவப் பாடத்தைப் படித்தார்.
1886 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும் இராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். பின்னர் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். தன்னுடைய இந்த பயணங்கள் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை நிலை
போன்றவற்றை அனுபவித்து அறிந்தார்.
1893 ஆம் ஆண்டு அவர் நிகழ்த்திய சிகாகோ சொற்பொழிவு உலகப்புகழ் பெற்றது. 1897 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியவுடன் கொழும்பு முதல் கல்கத்தா வரை அவர் ஆற்றிய பேச்சுக்கள், அப்போது கீழ்நிலையில் இருந்த இந்தியரை விழிப்புறச் செய்வதாகவும், இளைஞர்கள் தம்முள் இருந்த ஆற்றல்களை உணரும்படிச் செய்வதாகவும் அமைந்ததாக கருதப்படுகிறது. பின்னர் கல்கத்தாவில் இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடத்தை நிறுவினார்.. 1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் காலமானார். எதையும் முற்றிலும் ஏற்குமுன், அதனை சோதித்துப் பார்க்கும் குணம், சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு இருந்தது. ஆகவே, எந்த ஒரு சோதனையும் இல்லாமல் ராமகிருஷ்ணரர் அவர்களை தனது குருவாக ஏற்றுக் கொள்ள அவரால் இயலவில்லை. அப்போது அவருக்கு ராமகிருஷ்ணரர் அவர்கள் உரைத்தது ஞாபகத்திற்கு வந்தது. ‘ஒருவர் கடவுளை உணர வேண்டும் என்றால், பணம் மற்றும் பெண்களின் மீதுள்ள ஆசையை விட்டுக் கொடுக்க வேண்டும்’ என்று கூறினார். இதனை நினைவில் கொண்ட விவேகானந்தர் அவர்கள், ராமகிருஷ்ணர் அவர்களின் தலையணைக்கடியில் ஒரு ரூபாய் நோட்டை மறைத்து வைத்தார். வெளியில் சென்ற ராமகிருஷ்ணர் அவர்கள், தனது அறைக்கு வந்து கட்டிலில் படுத்தார். மறுகணமே, அவருக்குத் தேள் கடித்தது போல் இருந்ததால், கட்டிலிலிருந்து குதித்தார். பின்னர், அவரது மெத்தையை உதறியபோது, அவர் ரூபாய் நாணயம் கீழே விழுந்ததைக் கண்டார். பின்னர், இச்செயல் சுவாமி விவேகனந்தருடையது என்பதையும் அறிந்தார், ராமகிருஷ்ணர் விவேகானந்தர், ராமகிருஷ்ணரை தனது குருவாக ஏற்றுக் கொண்டு, இரட்டைத் தன்மையல்லாத அத்வைத வேதாந்தத்தில் ஐந்து ஆண்டுகள் அவரின் கீழ் பயிற்சி மேற்கொண்டார். 1886ல், ஸ்ரீ ராமகிருஷ்ணர் அவர்கள் காலமானார்.
விவேகானந்தர் நினைவு மண்டபம் : தமிழ்நாட்டின் தென்கோடி எல்லையான கன்னியாகுமரியில்இருக்கும் விவேகானந்தர் பாறையின் மேல் அமைந்துள்ளது. 1892ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் தேதி கன்னியாகுமரி வந்த விவேகானந்தர் கடலுக்குள் நீந்திச் சென்று அங்கிருந்த பாறையில் மூன்று நாட்கள் கடும் தவம் இருந்த இடத்தில் இம்மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
இம்மண்டபத்தினுள் விவேகானந்தரின் முழு உருவ வெண்கலச் சிலையும், விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் பின் பகுதியில் மண்டபத்தின் கீழே ஒரு தியான மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இது விவேகானந்த கேந்திரம் எனும் அமைப்பின் பராமரிப்பில் உள்ளது.
கன்னியாகுமரியான ஸ்ரீ பகவதியம்மன், சிவபெருமானை மணப்பதற்காக இந்தப் பாறையில் நின்று தவம் செய்ததாகவும் அதனால் இந்தப் பாறையில் அவரது பாதத்தின் தடம் பதிந்துள்ளது என்றும் இந்து சமயத்தவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்து சமயத்தவர்களால் அம்மன் பாதம் என்று கருதப்படும் இடம், கண்ணாடியில் பார்வைக்குத் தெரியும்படி பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதத்தைச் சுற்றிக் கோயில் போன்ற அமைப்பில் திருபாத மண்டபம் எனும் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
விவேகானந்தர் நினைவு மண்டபம், கடற்கரையிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பெரிய பாறையின்மீது அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரையிலிருந்து இங்கு செல்வதற்கு விசைப்படகுகள் இயக்கப்படுகின்றன. இந்த நினைவு மண்டபத்தில், ஸ்ரீபாத மண்டபம், சபா மண்டபம், தியான மண்டபம் என்று மூன்று பகுதிகள் உள்ளன. ஸ்ரீபாத மண்டபம் இருக்கும் பாறைப் பகுதியில்தான், பகவதியம்மன், சிவபெருமானை மணப்பதற்காக ஒற்றைக் காலில் நின்று தவம் செய்ததாகவும், அதனால், இந்தப் பாறையில் அவரது பாதத்தின் தடம் பதிந்துள்ளது என்று நம்பப்படுகிறது. இதன் காரணமாக, இந்தப் பாறைக்கு ஸ்ரீபாதப் பாறை என்று பெயர் வந்தது. இதே பாறையில்தான், சுவாமி விவேகானந்தரும் ஞானம் பெற்றார் என்றும் நம்பப்படுகிறது. சபா மண்டபத்தில், விவேகானந்தர் நின்ற நிலையிலான பெரிய வெண்கலைச் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இச்சிலை பார்ப்பவர் அனைவரையும் கவரும் தன்மை கொண்டது. இம்மண்டபம், இந்துக் கோவிற் கலையம்சங்களைக் கொண்ட 12 கருங்கல் தூண்களையும், பேலூர் இராமகிருஷ்ண ஆலயத்தின் விமான அமைப்பின் அம்சத்தையும் கொண்டுள்ளது. கருங்கல்லின் நேர்த்தி, பளபளப்பு நம்மை பிரமிக்க வைக்கிறது.
சபா மண்டபத்திற்கு அருகில் தியான மண்டபம் உள்ளது. சுற்றுலா பயணிகள் எந்தவித வெளிப்புற இரைச்சல், தொந்தரவு இல்லாமல் மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் செய்யலாம். இங்கு இருக்கும் பேரமைதி எப்பேர்பட்ட மன உளைச்சலையும் மாற்றும் வலிமை படைத்தது. இந்தியாவின் இளைஞர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாய் விளங்கும் சுவாமி விவேகானந்தரின் நினைவாக கன்னியாகுமரியில் எழுப்பப்பட்டுள்ள இந்த நினைவு மண்டபம், தமிழகத்தின் ஒரு பெருமைமிகு பொக்கிஷமாகும்.
1897ல் “ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்” என்ற அமைப்பைத் தொடங்கி, அதன் சிந்தனைகளையும், இலக்குகளையும் முறைப்படுத்தினார். அடுத்த இரண்டு ஆண்டுகளில், கங்கை நதிக்கரையில் பேலூரில் ஒரு தளம் வாங்கினார். அங்கு, அவர் கட்டிடங்களைக் கட்டமைத்து, ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடத்தை’ நிறுவினார். மீண்டும், அவர் ஜனவரி 1899 முதல் டிசம்பர்1900 வரை மேற்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
திறக்கும் நேரம் : திறக்கும் நேரம் : (ஏப்ரல் முதல் செப்டம்பர்) காலை 6 மணி முதல் 11:30 மணி வரை, மாலை 4:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை (அக்டோபர் முதல் மார்ச் வரை) 6:30 மணி முதல் 11:30 மணி வரை, 3:30 மணி வரை திறந்து இருக்கும்.
அருகில் உள்ள ரயில் நிலையம் : கொல்கத்தா 7 கி.மீ
அருகில் உள்ள விமான நிலையம் : கொல்கத்தா 17 கி.மீ
தங்கும் வசதி : உண்டு
பேருந்து வசதி: உண்டு