பழைய மாங்காடு, நாகநாதஈஸ்வரர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் வேலூர் மாவட்டத்தில், ஆற்காட்டில் அமைந்துள்ளது.
இறைவன் : நாதநாத ஈஸ்வரர்
இறைவி : நாகஈஸ்வரி
தல விருட்சம் : நாகலிங்க மரம்
தல சிறப்புகள் : பாலாற்று கரையின் தென் கரையில் அமைந்துள்ளது. மூலவர் நாக நாத ஈஸ்வர் சுயம்பு வாக அருள்பாலித்து வருகிறார். சேக்கிழார் ஆன்ம மூர்த்தியாக அருள் புரிந்து விளங்குகிறார். சிற்ப வேலைப்பாடுகளுடன் கருவறை அர்த்த மண்டபம், மகா மண்டபம், ராஜ கோபுரம் ஆகியவற்றுடன் காணப்படுகிறது. இத்திரு கோவிலில் பஞ்சலிங்கங்கள் பிரதிஷடை செய்யப்பட்டுள்ளது. அம்பாள் தனி சன்னதி உள்ளது. திருக்கோவில் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் பல்லவர் காலத்தில் கற்கோவிலாக கட்டப்பட்டுள்ளது.
மகா சிவராத்திரி, அன்னபிஷகம், நவராத்திரி பூஜை, பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி, தைப்பூசம், குருபெயர்ச்சி, சனி பெயர்ச்சி போன்ற நாட்களில் விழாக்கள் சிறப்பாக கொடாடப்படுகிறது.பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமி அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாத்தி தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.
காலை 7.30 மணி முதல் பகல் 10.30 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள நிலையம் : வாலாஜா ரோடு, காட்பாடி, அரக்கோணம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு