அதங்குடி, விருப்பாட்சி ஈஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் வட்டத்தில் அதங்குடி கிராமம் அமைந்துள்ளது.
இறைவன் : விருப்பாட்சி ஈஸ்வரர்
உற்சவர் : சிவகாமிசந்திரசேகர்
இறைவி : அகிலாண்டேஸ்வரி
தல விருட்சம் : வில்வம்
தல சிறப்புகள் : சோழர்கள் கட்டிய 108 சிவத்தலங்களில் இதுவம் ஒன்று. மேலும் இப்பகுதில் வரதராஜபெருமாள் சன்னதி இருப்பது மிகவும் சிறப்பு. மூலவர் கிழக்கு பக்கமும், அம்பாள் தெற்கு பக்கம் பார்த்த வண்ணம் உள்ளனர். கிழக்கு பக்க மகா மண்டபத்தில் 300 பேர் அமரும் வகையில் உள்ளது. மேலும் குத்து விளக்கு பூஜை செய்யும் இடவசதி உள்ளது. சூரியன், சித்தி விநாயகர், பரந்த வெளியில் லிங்கோத்பவர், சரஸ்வதி அருகில் வள்ளி தெய்வானைஉடன் சுப்பிரமணியர், துர்கை சண்டிகேசவரர் சந்நதி உள்ளது. தோல் நோய்க்கான பரிகார தலமாக விளங்குகிறது. முன்னர் காலத்தில் கோவில் செதிலமடைந்து காணப்பட்டது. தற்போது கோவிலை புதுப்பித்து பல விக்கிரகங்கள் பிரதிஷடை செய்துள்ளனர். 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் அருகில் முஸ்லீம் வசிக்கும் பகுதில் சிவத்தலம் அமைந்துள்ளது. இப்பகுதியில் வாழ்ந்த வெளிநாட்டு குடிபெயர்ந்த மக்கள் விஷேச நாட்களில் ஒன்று கூடுகின்றனர்.
பிரதோஷம், சிவராத்திரி, அமாவாசை, ஆருத்திரா தரிசனம், மாசிமகம், பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகிறது. சகல ஐஸ்வர்யங்கள், திருமண தடை, புத்திர பாக்கியம் ஆகியவற்றிக்கு இங்கு பிராத்தனை செய்கின்றனர்.
காலை 8.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி
அருகிலுள்ள நிலையம் : திருவாரூர், நீடாமங்கலம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை