ஸ்ரீ காளிகாம்பாள் சமேத கமடேஸ்வரர் திருக்கோயில்- சென்னை
திருத்தலஅமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை நகரின் மிக முக்கியப் பகுதியான பாரிமுனையில் உள்ள தம்புசெட்டித் தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீ காளிகாம்பாள் சமேத கமடேஸ்வரர் திருக்கோயில்.
இந்நத கோயில் ஸ்ரீகாளிகாம்பாள் திருக்கோயில் என்தறு பலராலும் அறி0யப்படும்.
இறைவன் : கமடேஸ்வரர்
மூலவர் : ஸ்ரீ காளிகாம்பாள்
ஆலய விருட்சம் : மாமரம்
தீர்த்தம் : கடல் நீர்,
தீர்த்தத்திற்குறிய பரிவார தேவதை : கடற்கன்னி
அன்னை ஸ்ரீ காளிகாம்பாள் அர்த்த பத்மாசனத்தில் பாச, அங்குசத்தை கையிலேந்தி கமலத்தில் புன்னகை செய்கிறாள். ஸ்ரீஅம்பாள் மேற்கு நோக்கி அமர்ந்திருப்பது இவ்வாலயத்தின் தனிச்சிறப்பு அன்னையின் திருவடியில் ஸ்ரீ ஆதிசங்கரர் அவர்களால் நிறுவப்பட்ட ஸ்ரீசக்கரம், அர்த்தமேருவாக அமைந்துள்ளது. இவ்வாலயம் வாஸ்து முறைப்படி அமைந்திருக்கிறது. பள்ளியறையில் காணப்படும் வெள்ளி ஊஞ்சலில் அன்னையின் திரு உருவத்தை காணலாம்.இருபுறமும் சரஸ்வதி, மஹாலட்சுமி உள்ளனர். கமடேஸ்வரர் மேற்கு நோக்கி காட்சி தருகிறார்.
ஸ்ரீகாளிகாம்பாளை, கர்பக்கிரகத்தின் முன்பு அமர்ந்து நிதானமாக வழிபடும் முறை இங்ரகு உள்களது. அதாவது வரிசையில் வரும் பக்தர்களை ஒரு சிறு சிறு குழுவாக பிரித்து கர்பக்கிரகத்தின் முன்பு அமரவைத்து வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இந்ைத முறை அங்கு வரும் பக்தர்களுக்கு விரும்பத் தக்கதாக இருக்கிறது. மாதந்தோறும் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும், பவுர்ணமி நாட்களிலும் பக்தர்களின் கூட்டம் அதி கமாக இருக்கிறது. நெய் விளக்கு ஏற்ுறுவது, எலுமிச்சை மாலை அணிவிப்பது போன்றவற்றை பக்தர்கள் செய்கின்றனர்.
பஞ்சலோக விக்ரகங்கள் ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் ஆலயத்தில் முப்பத்தி மூன்று பஞ்சலோகத் திருமேனிகள் உள்ளன. இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத புகழ் பெற்ற கிண்ணித்தேரினை இவ்வாலயத்தில்தான் காண்முடியும்.
கோயில் வரலாறு: சென்னைக் கோட்டையில் கி.பி.1640லேயே இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. ஆனால் ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில்தான் இந் த கோயில் தம்புசெட்டித் தெருவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. புராணங்களில் பரதபுரி, சுவர்ணபுரி என்றெல்லாம் அழைக்கப்பட்டுள்ளது. கோயிலில் உள்கள மூலவச் சிலைக்கு அந்ாத காலத்தில் செந்தூரம் சாற்றி வழிபட்டதால் சென்னியம்மன் என்ற பெயரும், நெய்தல் நில காமாட்சி என்ற பெயரும் காளிகாம்பாளுக்கு உண்டு.
காஞ்சிபுரத்தில் உள்ள அன்னை காமாட்சியே ஸ்ரீகாளிகாம்பாளின் 12 அம்சங்களுள் ஒன்றாகும். அதனை நினைவூட்டும் வகையில் தான் மேற்கு நோக்கி அர்த்தபத்மாசனத்தில் அருளாட்சி செய்யும் ஸ்ரீகாளிகாம்பாள் பாதத்தை நோக்கி அர்த்தமேரு சக்கரம் அமைந்துள்ளது. மூல கர்ப்பக்கிரகத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீகாளிகாம்பாளின் திருக்கைகளில் அங்குசமும், பாசமும், நீலோத்ப மலரும் காட்சியளிக்கிறது. இடது கை வரதமுத்திரையுடன் காணப்படுகிறது. வலது காலை தாமரையில் வைத்தபடி அன்னை காட்சி தருகிறார்.
இந்த கருவறையைச் சுற்றி ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர், நவக்கிரகங்கள், வள்ளி தெய்வயானையுடன் அமர்ந்திருக்கும் ஸ்ரீமுருகர், ஸ்ரீவீரபஹாமங்கர் மற்றும் அவரது சீடர் சித்தையா, அன்னையின் பள்ளியறை, ஸ்ரீகமடேஸ்வரர் சந்நிதி, ஸ்ரீதுர்கா, ஸ்ரீசண்டிகேஸ்வரர், பிரம்மா, சூரிய சந்திரர் சந்நிதிகள் அமைந்துள்ளன.
வெளிப்பிரகாரத்தை சுற்றி ஸ்ரீ சித்தி விநாயகர், கொடி மரம், வள்ளி, தெய்வானையுடன் கூடிய ஸ்ரீ வட கதிர்காம முருகன், ஸ்ரீசித்திபுத்தி விநாயகர், ஸ்ரீவீரபத்திர மகாகாளி, ஸ்ரீநாகேந்திரர், ஸ்ரீவிஸ்வபிரம்மா, ஸ்ரீகாயத்ரி, ஸ்ரீதுர்கா, யாகசாலை, ஸ்ரீநடராஜர், ஸ்ரீமகாமேரு சந்நிதிகள் இடம் பெற்றுள்ளன.
கோவிலின் சிறப்பு : பராசரர், வியாசர், அகத்தியர் உள்னளிட்ட முனிவர்களும், இந்திரன், வருணன் ஆகிய அஷ்டதிக்கு பாலகர்களும், சூரியன், சந்திரன், சனீஸ்வரன் ஆகிய கிரகங்களும், ஆமைவடிவில் கமடேஸ்வரராக திருமாலும் இத்தலத்தில் இருக்கும் அன்னையை வழிபட்டுள்ளனர்.
குபேரன் இத்திருத்தலத்திற்கு வந்து அம்பாளை வழிபட்ட பின்னரே அவருக்கு செல்வம் அதிகரித்தது. மேலும், மராட்டிய சிங்கம் சத்ரபதி சிவாஜி 1677-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் திகதி அன்று ஸ்ரீகாளிகாம்பாளை வழிபட்ட பின்னரே சிவாஜி தன்னை சத்ரபதியாக முடிசூட்டிக் கொண்டார். அம்பாள் சன்னதி சுற்றுச்சுவர்களில் கோமுகம் அருகில் சண்டிகேஸ்வரி, கோஷ்டித்தில் சரஷ்வதி, ஸ்ரீ பிரம்மவித்யா, ஸ்ரீ வைஷ்ணவி, ஸ்ரீ தாட்சாயனி, ஸ்ரீ மஹாலட்சுமி எனும் ஐந்து கன்னியர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
காலை 6.30 மணி முதல் பகல் 11.30 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : பாரி முனை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு ( இரவில் தங்க அனுமதி இல்லை )
உணவு வசதி : உண்டு