தும்பைப்பட்டி, சங்கரநாராயண சுவாமி
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் மேலூரில் மேலூர் வட்டத்தில் எனும் கிராமத்தில் உள்ளது.
இறைவன் : சங்கரநாராயண சுவாமி, சங்கரலிங்க சுவாமி
இறைவி : கோமதி அம்மன்
தல தீர்த்தம் : நூபுர கங்கை, சோலைமலை தீர்த்தம்
தல விருட்சம் : ஆலமரம்
தல சிறப்புகள் : நாகராஜர் இன்றும் கோவிலை வலம் வருகிறது, சுவாமியிடம் கவுளி உத்தரவை பெற்று செல்கின்றனர்.
தல வரலாறு : 300 ஆண்டுகளுக்கு முன்பு சங்கரன் கோவில் இருந்து தும்பைபட்டிக்கு வந்த சங்கரன் இங்கு வந்து ஆலமரத்தின் அடியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இவருக்கு ஏழு குழந்தைகளில் ஒருவர் திருமணம் செய்யாமல் பட்டவர் என்ற பெயருடன் வாழ்ந்து வந்ததாகவும், வில் வித்தை சிறப்பாகவும் கற்று வைத்துஇருந்தார். கிராம மக்களுக்கு காவல் பணியை மேற்கொண்டு வந்து வந்தார். இங்குள்ள ஆலமரத்தில் பிரமீடு வடிவ அமைப்பு உள்ளது.தற்போது சங்கர நாராயண கல்வி மற்றும் அன்னதான அமைப்பை ஏற்படுத்தி அன்றாட பூஜைகள், விழாக்கள் நடைபெறுகிறது. சங்கரநாராயண சுவாமி, சங்கரலிங்க சுவாமி, கோமதி அம்மன் மூவரும் கிழக்கு நோக்கி உள்ளனர்.
அம்மை நோய் குணமாக அம்மனிடம் வேண்டி செல்கின்றனர். தொழிலில் லாபம் கிடைக்க, நாக தோஷம் நிவர்த்தி அடைய, அனைத்து விதமான பரிகார தோஷ நிவர்த்தி இங்கு வந்து வேண்டி கொள்கின்றனர். கோமதி அம்மனுக்கு பௌர்ணமி அன்று 21 நெய் விளக்குகள் ஏற்றி வழிபட சந்தான பாக்கியம் கிடைக்கிறது. மகா விஷுனுவிற்கு அமாவாசை அன்று 11 முறை துளசியால் அர்ச்சனை செய்ய திருமண தடை நீங்குகிறது. பிரம்மதி தோஷம் நீங்க பூஜை செய்யபடுகிறது.
காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணிவரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : மதுரை
அருகிலுள்ள ரயில் நிலையம் : மதுரை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை