குன்னம், பூமீஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி இருந்து 10 கி.மீ தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து 80 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.
இறைவன் : பூமீஸ்வரர்
இறைவி : அருணா வித்துருமநாயகி, செண்பகம்
தல விருட்சம் : வில்வம்
தல தீர்த்தம் : சக்கர தீர்த்தம்
தல சிறப்புகள் : இத்தலத்தின் மேற்கு திசையில் வடரங்கம் என்ற விஷ்ணு தலமும், கிழக்கு திசையில் முருக பெருமான் வடக்கு முகம் பார்த்து தவக்கோலத்தில் அருள்புரியும் திருமயிலாடி தலமும், தெற்கு திசையில் தேவார வைப்பு தலமான கரியவன நகர் எனும் முருகன் தலமும் வடக்கு திசையில் கொள்ளிடம் ஆறும் ஓடுகிறது. சகல வித ஐஸ்வர்யங்கள் வேண்டி இத்தலத்திற்கு வருகை தருகின்றனர்.
தல வரலாறு : ஜமதக்கனி முனிவரின் மனைவி ரேணுகாதேவி காவேரியில் நீரடி முனிவரின் பூஜைக்கு மண்குடத்தினால் நீர் கொண்டு வருவாள். ஒரு நாள் வானத்தின் வழியே சென்று கொண்டுஇருந்த கந்தர்வனின் நிழல் நீரில் விழுந்தது. அந்த அழகில் மயங்கிய ரேணுகாதேவி உற்று நோக்க சமைக்கும் சக்தி அவளை விட்டு சென்றது, இதனை அறிந்த முனிவர் பூஜைக்கு நேரம் ஆனதை அறிந்த ஜமதமுனிவர் தனது குமாரர்களை அழைத்து ரேணுகாதேவி தலையை வெட்ட சொன்னார். கடைசி மகனான பரசுராமர் தனது கையிலிருந்த கோடரியால் தலை வெட்டினான்.இதனால் மனம் மகிழ்ந்த முனிவர் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க தந்து தாய் உயிரோடு வேண்டும் என்று பரசுராமர் வேண்டினான். ரேணுகாதேவியும் உயிர் பெற்றாள்.தாயின் தலையை வெட்டியதில் பரசுராமருக்கு தோஷம் தாக்கியது. அதற்காக தீர்த்த யாத்திரை மேற்கொண்டு இறுதியாக குன்னம் தலத்தை அடைந்தார். கோவிலுக்கு முன்புள்ள குளத்தில் குளித்துவிட்டு பூமிஸ்வரை தியானம் செய்ய அமர்ந்தார். அப்போது அங்கு ஒரு புலி அவன் மீது பய தனது தாயாரை வேண்டினான். ரேணுகாதேவி தான் வைத்துஇருந்த குடத்தின் நீரை புலியின் மீது தெளித்தாள். புலியானது ஒரு தேவனாக மாறி இருவரையும் வேண்டி தேவலோகம் சென்றது.
மாசி மாதம் இந்த குளத்தில் நீராட அனைத்து சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்கும் என்று மக்கள் நம்புகின்றனர். கார்த்திகை மாதம் சோமவாரத்தில் பூமீஸ்வரர் பரசுராமருக்கு காட்சி தந்து தோஷத்தை நீக்கினார்.
காலை 8.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணிவரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி, மதுரை
அருகிலுள்ள ரயில் நிலையம் : சீர்காழி
தங்கும் வசதி : இல்லை
பேருந்து வசதி : உண்டு
உணவு வசதி : இல்லை